Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
| 48 comments ]

அன்பு சகோதரர்களே...

இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்று என்க்குத்தெரியவில்லை...இதை படித்து விட்டு நீங்கள் என்னை ராஜபக்சே கூட்டத்தை சேர்ந்தவன், என்னலாம்...கெட்ட வார்த்தையால் என்னை வையலாம்.

ஆனால் தமிழ் பதிவர் உலகம் சார்பாக நான் சொல்ல வேண்டிய விடயத்தைக் கூறியே ஆக வேண்டும். சமீப காலமாக ஈழத்தமிழர்களை, தலைவர் பிரபாகரனைப்பற்றி எழுதினாலே...நீங்கள் வேலை இல்லாதவர்கள், எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்...நாயே பேயே என்று திட்டித்தீர்க்கிறீகள்.

யார் மீது உங்களுக்கு கோபம், யார் உங்கள் எதிரி..யார் உங்கள துரோகி...
உங்களுக்காக ஈழத்தமிழன், ஈழத்தமிழன் என்று அரசியல் பண்ணிக்கொண்டு தத்துப்பிள்ளைக்கு பாசத்தை தாரை வார்த்து, சொந்த பிள்ளையான தமிழகத்தமிழனை மறந்த தலைவர்கள் தமிழகத்தில் ஏராளம்...

கலைஞரைத் துரோகி என்கிறீகள்...அவர் தோற்ற வரலாறெல்லாம் உங்களுக்குத் தோள் கொடுத்த நேரத்தில் தானே...தோழ்வியில் துவண்டு
இருந்த அந்த நேரத்தில் அவருக்கு இலங்கைத்தமிழர் நீங்கள் என்ன செய்தீர்...

வைகோ, திருமா,பழ,ராமதாஸ் இப்படி உங்கள் பின் நின்றவர்கள் ஏராளம்...அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீகள்...துப்பாக்கியுடன் இலங்கைக்கு வந்து போராட வில்லையா... அட அவர்களை விடுங்கள் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் போரட்ட களத்தை விட்டு விட்டு புழம் பெயர்ந்து இங்கு வந்து எங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்...

சமீபத்தில் பதிவுகளில் வார்த்தை துஷ்பிரயோகம் வேறு...சோனியா ஒரு காமவெறி பிடிதவள் என்று அண்மையில் ஒரு பதிவு...தன் கணவரை கொன்று விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழினத்தையே கொன்று குவித்து அந்த ரத்தத்தில் தினமும் குளித்து தனது பலியை தீர்த்துக்கொள்கிறார் ஒரு ரத்த வெறி பிடித்த இத்தாலிக்காரி.என்ற விளக்கம் வேறு தன் கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்...
இது போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை தவிருங்கள்...கோபம் கண்னை மறைக்கும் என்றால் அதே கோபம் சோனியா அவர்களுக்கும் இருக்கும் தானே..காட்டுக்குள் இருக்கும் பிரபாகரனும் குடும்பத்துடன் தானே இருந்தார்..? நீங்கள் உபயோகித்த அந்த வார்த்தையை அவர்மீது பிரோயோகித்தால் உங்களால் தாங்க இயலுமா..சோனியாவும் ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் தான்...உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்...

உங்கள் கோபத்தை எதிரிகளிடம் காட்டுங்கள்...நண்பர்களிடம் காட்டி நண்பர்களையும் எதிரியாக்கி விடாதீர்கள்...

இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...

புகழின் உச்சியில் இருக்கும் போது சறுக்கி விடாமல் இருப்பது தான் முக்கியம்...அந்த நேரத்தில் சுற்றங்களைப்பகைத்துக்கொண்ட யாரும் வெற்றி கொண்டதில்லை அதற்கு பேருதாரணம் சாதாம் ஹுசைன் மற்றும் விடுதலைப்புலிகள்...

வட, கிழக்குப்பிரச்சனையில் கருணாவை எதிரியாக்கியது...கூட இருந்த முஸ்லிம் சகோதரர்களை பகைத்துக்கொண்டது...இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் கொன்றது...ஒரு நாட்டின் தலைவரான ராஜூவைக் கொன்றது...

இவையெல்லாம் தானே உங்கள் பின்னடைவிற்கு காரணம்....ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விடுங்கள்...உங்கள் சோகம் நாங்கள் அறிகிறோம்...
நாங்கள் ஜடமல்ல...


ஆயுதப்போரை கைவிடுங்கள்...காந்திஜி வழியில் இன்னுமோர் போராட்டத்தை ஆரம்பியுங்கள்...அகிம்சை நிச்சயம் வெல்லும்...