| 7 comments ]

"நீங்களேல்லாம் ஹிட் எகிருவதற்காக எழுதறீங்க"
இது வலைப்பூக்களில் அதிகமாக உபயோகிப்படும் ஒரு வகையான சாடல் வார்த்தை...
எந்த ஒரு நல்ல விசயத்தைச் சொன்னாலும், அந்தப் பதிவர் மீது சேற்றை வாரி இறைப்பதில் பலருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி...ஹிட் எகிருவதால் என்ன லாபம்? எதுவும் கோடிக்கணக்கில் பணம் வரப் போகிறதா...இல்லை எழுதியவரை பாராட்டி எதுவும் விழா எடுக்கப் போகிறார்களா? என்றால் ஒரு வெங்காயமும் இல்லை...
கவர்ச்சிப்படங்கள் என்ற வார்த்தையைக் கண்டதும் எகிறிக் குதித்து வந்து அதைப் பார்க்கத்துடிக்கும் நம்மில் பலருக்கு நல்ல விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவரைப் பாராட்டி எந்த ஒரு வார்த்தையும் எழுதுவதில்லை...இது யார் தவறு... இது போன்ற விசயங்களைக் கேட்கும் என்னை பலப் புனைப்பேர்களில் வந்து காரி உமிழ்ந்து விட்டுப் போவீர்கள் என்பது வேறு விசயம்...
ஹிட் எகிர எதற்கு மாங்கு மாங்கென்று எழுத வேண்டும் நமிதாவின் பிட்டுப்படம் என்றால் மக்கள் பறந்து வர மாட்டார்களா..? அப்படி ஒரு மானங்கெட்ட தனத்திற்கு மஞ்சள் பத்திரிக்கை நடத்திவிட்டுப் போய் விடலாமே?
"வாசகனின் கையில் தான் எழுத்தாளனின் பேனா உள்ளது" ஒரு படைப்பாளனை நல் வழிப்படுத்துவதும் அவன் தான்....தீயதை எழுதத் தூண்டுவதும் அவன் தான்...
நல்ல எழுத்துக்களை ஆதரியுங்கள்...தீயவைகளைப் புறந்தள்ளுங்கள்.

| 10 comments ]



"இதுக்கு முன்னாலே நீ செக்ஸ் வச்சிருக்கியா"
"ம்ம்"
"யார் கூட "
"என் பாய் ப்ரண்ட் கூட, என் பக்கத்து வீட்டு அங்கிள் கூட, என் டாட் ப்ரண்ட்ஸ் கூட"
இது எதோ கற்பனைக் கதை அல்ல, 15 வய்து சிறுமிக்கும் ( நாம அப்படித்தான் நினைக்கிறோம்) 20 வயது இளைஞனுக்கும் நடக்கும் ஆன்லைன் கடலை...பார்த்துக் கொண்டிருந்த நாம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். இதுவெல்லாம் எதோ வெளிநாட்டு மக்களின் அரட்டை என்று நினைத்தால் அதுவும் இல்லை....இவை அனைத்தும் நடப்பது தமிழ்த் தளங்களில் தமிங்கிலீஸில்....தமிழ் முன்னேறி விட்டதா...?
நண்பன் இப்படி பலத் தளங்கள் இருப்பதைச் சொன்னபோது நம்பாமல் தான் நம் குழுவும் இதனுள் சென்றது...உள்ளே சென்று பார்த்தால் வெளிநாட்டினர் உத்தமர்கள் என்றே தோன்றியது....500க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் இருக்கிறார்கள்...மேலே குறிப்பிட்டது போல் நூற்றுக்கணக்கான உரையாடல்கள் அனைத்தும் இப்படி மானங்கெட்ட உரையாடல்களே...!
" முதன் முதலில் நீ யாருடன் உறவு கொண்டாய்"
"என் அக்காவுடன்"
"வேறே"
"என் சித்தி, அத்தை..."
இப்படி தொடர்ந்து கொண்டே போக...நமக்கு இரத்தம் உறைகிறது....இவையெல்லாம் உண்மையா..? நாமே நேரில் களத்தில் இறங்கி மாற்றுப் பெயரில் அந்தத் தளத்தில் நுழைந்தோம்...
என்னுடன் பேசியவளுக்கு 35 வயதாம்... கணவன் பிசினஸ் விசயமாக வெளிநாடு சென்றிருக்கிறாராம்...ஒரு மகனாம்...நீ எங்கிருக்கிறாய் என்று கேட்க நான் கோவை என்றேன்....அவள் சென்னை என்றது மட்டுமில்லாமல் முகவரி முதல் கொண்டு கொடுத்தாள்...தன் அத்தை கூட இருப்பதாகவும் அவர்கள் இல்லாத நாள், அவள் கூற நான் சென்னை வரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள்....
ஒரு குடும்பப் பெண் எப்படி எல்லாம் பேச முன்வர மாட்டாளோ அவை அனைத்தையும் பேசினாள்...தொலைபேசி எண் கூடத்தந்தாள்...என் மனசாட்சி அதற்கு மேல் எனக்கு இடம் தரவில்லை...அதிலிருந்து வெளியானேன்...எதோ விபச்சாரம் செய்து விட்டாற் போல் மனது நடுங்கியது...இவை அனைத்தும் நடந்தது இரவு 2 மணிக்கு...உலகம் தூங்கிக் கொண்டிருந்தது...ஒரு கூட்டம்...?

என்னப் பிரச்சனை இவர்களுக்கு...."என் கணவன் என்னை ஒரு முறைக்கு மேல் பண்ணுவதில்லை...அவனுக்கு அது சின்னது...எனக்கு ஒரே நேரத்தில் நாலு பேருடன் உறவு கொள்ள ஆசை'...அப்பப்பா...இன்னும் இன்னும்...
செக்ஸ் தான் வாழ்க்கையா...? அதை மீறி எத்தனை நல்ல விசயங்கள் இருக்கிறது...ஏன் இவர்கள் இப்படி...? ஆயிரம் தான் காரணங்கள் இருந்தாலும் இது சரியா...? வெளியே உத்தமர்களாக வேசமிடும் இவர்களின் நடுநிசி வாழ்க்கை இத்தனைக் கேவலமானவையாக இருக்கிறது...அதன் பின் இன்னும் உள்ளோடி பார்த்தால் நுற்றுக்கணக்கான தமிழ் செக்ஸ் தளங்கள்...
ஆயிரக்கணக்கான உறவுகளை கொச்சைப்படுத்தும் கதைகள், முழு நீல வீடியோக்கள்,கலாச்சாரத்தை தரைமட்ட மாக்கும் கேள்வி பதில்கள்...தலைச் சுற்றியது...

மஜா மல்லிகா, இது ஒரு கேவலமான தளத்தின் செக்ஸ் நிபுணரின் பெயர்.இவளிடம் கேட்கப்படும் பெரும் பான்மையான கேள்விகள்...பல ஆண்கள் ஒரு பெண் உறவு பற்றியது தான்...எல்லாவற்றை ஆதரித்து உற்சாகப்படுத்தி கணவனுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் பல ஆண்களை திருப்தி படுத்த அந்த கேவலமானவள் கொடுக்கும் அறிவுரை(?)யை ஆஹா, ஓஹோவென்று பாராட்டும் ஒரு கூட்டம்.
ஒரே வருடத்தில் 7 1/2 லட்சம் ஹிட்களைப் பெற்றதாக விளம்பரப் படுத்திக்கொள்ளும் சில செக்ஸ் வலைப்பூக்கள்... நம் தலைமுறையினரின் ரசனையை பறைசாட்டியது...
பல தரப்பட்ட சாதாரணக் குடும்பப் பெண்களை செக்ஸ் வட்டத்திற்குள் கொண்டுவந்து மொபைல் கேமராவில் படம் பிடித்து அதை இது போன்ற தளங்களில் வெளியிட்டு களிப்புறும் சுரணைக் கெட்ட இளைஞர் கூட்டம் இங்கு ஏராளம்...மொபைல்கடை, துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் இப்படியான பொது இடங்களில் வேலைசெய்யும் பெண்கள் இவர்களின் சிற்றின்பத்திற்கு ஒத்துழைக்க, இது போன்ற தளங்களில் அவர்களின் மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறது என்பது அந்தப்பெண்கள் அறியாத உண்மை...
தன் மனைவி, சகோதரி, தோழி, சொந்தம் எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பல அப்பாவி ஆண்களுக்கு இது போன்ற தளங்களில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.இது போன்ற தளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களில் பாதி பாலியல் தொழில் முறைப் பெண்கள் இல்லை...குடும்ப மானம், கலாச்சாரம் பேசிக் கொண்டு முகமூடி அணிந்து திரியும்...நம் நம்பிக்கைக்கு பாத்திரமான பெண்கள் தான் இங்கு அதிகம்.
நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்... கலாச்சாரத்தின் அடுத்த கட்டம் இதுவா?
தமிழ் வளரவேண்டும் இது போன்ற தரங்கெட்ட தனத்தால் அல்ல...
தமிழ் தழைத்தோங்க வேண்டும் இது போன்ற தறுதலைகளால் அல்ல...
தமிழ் செழிக்க வேண்டும் இது போன்ற சுரணைக் கெட்டவர்களால் அல்ல...
நல்லது எவ்வளவு உண்டோ அதே அளவு, இது போன்ற கேவலங்களும் இணையத்துள் பிண்ணிக் கிடக்கிறது...இளைய தலைமுறையினரின் சீரிய ஒழுக்க முறை வழிகாட்டுதலில் நமக்கும் பெரிய பங்குண்டு...என்பதை எண்ணத்துள் நிறுத்தி...அவர்களை நல்வழித்தவறாமல் பாதுகாப்போம்....அரசாங்கமும் இது போன்றத் தளங்களை கையகப்படுத்தி அன்னபறவைப் போன்று தீயது களைந்து நல்விசங்களை மட்டும் நம் பார்வைக்குத்தர நடவடிக்கைத்தரும் என்று நம்புவோம்...

காமத்தளங்கள் ஒழிப்போம்...நம் கலாச்சாரம் காப்போம்....!

| 7 comments ]

பெரும் புயலடித்து ஓய்ந்து இருக்கிறது...இந்திய தேர்தல்.எவ்வளவோகுழப்பத்திற்கு மத்தியில்மக்கள்தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பொதுவாக தமிழக மக்கள் எதையும் மொத்தமாகவே செய்வார்கள்.அலைகளில் சிக்கியே எல்லாத்தேர்தல்களும் சீரழிந்து போனது என்பதே தமிழகாரசியலின் முந்தைய வரலாறு...முதல் முறையாக மக்கள் தெளிவாக செயல்பட்டு எதிர்கால அரசியல் கோமாளிகளுக்கு மக்கள் எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள்...

அதில் இந்த பகுதியில் காங்கிரஸ், மற்றும் பாமக பெற்ற சாட்டையடிகளைப்பார்ப்போம்.

சாட்டையடி-1-காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஒரு கணிசமான சீட்டுக்களைப் பெற்றாலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு சிறு சறுக்கல் தான்.ஈழப்பிரச்சனையில் இவர்களின் கண்டு கொள்ளா நிலையும், தலிவர்களின் வாய்ச்சவடலும் இதன் தலிவர்கள் தலை உருள காரணமாக அமைந்தது.இனிவரும் ஆட்சியில் இதனைச் சரிசெய்ய மக்கள் அளித்த சந்தர்ப்பம் தான் ஏனைய சீட்டுக்களும்..

சென்ற முறை லட்சங்களின் முன்னனியில் வெற்றி பெற்ற சிதம்பரத்திற்கு இந்த தேர்தல் முடிவில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...மிகச்சொற்ப்ப எண்ணிக்கையில் இழுப்பறி, தொகுதிபக்கம் வராத MPக்களுக்கு அவன் எந்த கொம்பனானாலும் இது தான் நிலை என்று மக்கள் பெரும் சாட்டையடி மூலம் உணர்த்தியுள்ளனர்...




சாட்டையடி-2-பாமக

ஐந்து வருடங்கள் கோபாலபுரத்தில் வேட்டிதுவைப்பார், அடுத்த ஐந்து வருடங்கள் போயஸ் கார்டனில் சேலைதுவைப்பார் என்று புகழப்படும்...ராமதாஸின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இந்த தேர்தலில் பலத்த சாட்டையடி...எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக்கட்சியில் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்பதை அரசியல் கொள்கையாகக் கொண்ட பாமக பெற்ற சாட்டையடியை தமிழகமே கொண்டாடியது...ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பாகுபாடில்லாமல் அனைவரும் வரவேற்ற ஒரு நிகழ்வு இந்தப்படுதோழ்வி...

எங்கள் கட்சி MLA, MPக்கள் தவறு செய்தால் சாலை நடுவில் வைத்து சவுக்கால் அடிப்போம் என்று ஆரம்ப காலங்களில் இவர்கள் கூறி வந்ததற்கு இன்று இவர்கள் அனைவரையும் மக்கள் படுதோல்வி எனும் சவுக்கால் விளாசியிருக்கிறார்கள்...

தோல்வியிலிருந்து தான் உண்மையான பாடங்களைக்கற்றுக்கொள்ள இயலும்..அதை அறியாமல், தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கான தோல்வியை , தேர்தல்கமிசன் மீதும், வாக்கு இயந்திரம் மீதும் கூறிக்கொள்வதை விட்டு விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடவிட்டால் பாமக என்ற கட்சியை இனி வரலாறுகளில் மட்டுமே தேட முடியும்...

| 48 comments ]

அன்பு சகோதரர்களே...

இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்று என்க்குத்தெரியவில்லை...இதை படித்து விட்டு நீங்கள் என்னை ராஜபக்சே கூட்டத்தை சேர்ந்தவன், என்னலாம்...கெட்ட வார்த்தையால் என்னை வையலாம்.

ஆனால் தமிழ் பதிவர் உலகம் சார்பாக நான் சொல்ல வேண்டிய விடயத்தைக் கூறியே ஆக வேண்டும். சமீப காலமாக ஈழத்தமிழர்களை, தலைவர் பிரபாகரனைப்பற்றி எழுதினாலே...நீங்கள் வேலை இல்லாதவர்கள், எங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்...நாயே பேயே என்று திட்டித்தீர்க்கிறீகள்.

யார் மீது உங்களுக்கு கோபம், யார் உங்கள் எதிரி..யார் உங்கள துரோகி...
உங்களுக்காக ஈழத்தமிழன், ஈழத்தமிழன் என்று அரசியல் பண்ணிக்கொண்டு தத்துப்பிள்ளைக்கு பாசத்தை தாரை வார்த்து, சொந்த பிள்ளையான தமிழகத்தமிழனை மறந்த தலைவர்கள் தமிழகத்தில் ஏராளம்...

கலைஞரைத் துரோகி என்கிறீகள்...அவர் தோற்ற வரலாறெல்லாம் உங்களுக்குத் தோள் கொடுத்த நேரத்தில் தானே...தோழ்வியில் துவண்டு
இருந்த அந்த நேரத்தில் அவருக்கு இலங்கைத்தமிழர் நீங்கள் என்ன செய்தீர்...

வைகோ, திருமா,பழ,ராமதாஸ் இப்படி உங்கள் பின் நின்றவர்கள் ஏராளம்...அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீகள்...துப்பாக்கியுடன் இலங்கைக்கு வந்து போராட வில்லையா... அட அவர்களை விடுங்கள் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் போரட்ட களத்தை விட்டு விட்டு புழம் பெயர்ந்து இங்கு வந்து எங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்...

சமீபத்தில் பதிவுகளில் வார்த்தை துஷ்பிரயோகம் வேறு...சோனியா ஒரு காமவெறி பிடிதவள் என்று அண்மையில் ஒரு பதிவு...தன் கணவரை கொன்று விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த தமிழினத்தையே கொன்று குவித்து அந்த ரத்தத்தில் தினமும் குளித்து தனது பலியை தீர்த்துக்கொள்கிறார் ஒரு ரத்த வெறி பிடித்த இத்தாலிக்காரி.என்ற விளக்கம் வேறு தன் கணவனைக்கொன்ற ஒரே காரணத்திற்காக மதுரையை எரித்த கண்ணகி கற்புக்கரசியானால்... இதுவும் ஒரு கற்புக்கரசியின் செயல் தான்...
இது போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை தவிருங்கள்...கோபம் கண்னை மறைக்கும் என்றால் அதே கோபம் சோனியா அவர்களுக்கும் இருக்கும் தானே..காட்டுக்குள் இருக்கும் பிரபாகரனும் குடும்பத்துடன் தானே இருந்தார்..? நீங்கள் உபயோகித்த அந்த வார்த்தையை அவர்மீது பிரோயோகித்தால் உங்களால் தாங்க இயலுமா..சோனியாவும் ஒரு பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்க்ப்பட்ட தலைவர் தான்...உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்...

உங்கள் கோபத்தை எதிரிகளிடம் காட்டுங்கள்...நண்பர்களிடம் காட்டி நண்பர்களையும் எதிரியாக்கி விடாதீர்கள்...

இந்த நிலைக்கு யார் காரணம் யோசியுங்கள்...

புகழின் உச்சியில் இருக்கும் போது சறுக்கி விடாமல் இருப்பது தான் முக்கியம்...அந்த நேரத்தில் சுற்றங்களைப்பகைத்துக்கொண்ட யாரும் வெற்றி கொண்டதில்லை அதற்கு பேருதாரணம் சாதாம் ஹுசைன் மற்றும் விடுதலைப்புலிகள்...

வட, கிழக்குப்பிரச்சனையில் கருணாவை எதிரியாக்கியது...கூட இருந்த முஸ்லிம் சகோதரர்களை பகைத்துக்கொண்டது...இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் கொன்றது...ஒரு நாட்டின் தலைவரான ராஜூவைக் கொன்றது...

இவையெல்லாம் தானே உங்கள் பின்னடைவிற்கு காரணம்....ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விடுங்கள்...உங்கள் சோகம் நாங்கள் அறிகிறோம்...
நாங்கள் ஜடமல்ல...


ஆயுதப்போரை கைவிடுங்கள்...காந்திஜி வழியில் இன்னுமோர் போராட்டத்தை ஆரம்பியுங்கள்...அகிம்சை நிச்சயம் வெல்லும்...

| 7 comments ]

எண்பத்தாறு வயதாகி விட்டது...இனி உள்ள காலம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை.ஆடி முடித்தாகி விட்டது...இனி குடும்பத்திற்கு உயில் எழுதிவைக்க வேண்டிய வேளை இது.யாருக்கு என்ன எழுத..?கோபாலபுர வீடு சின்னவனுக்கும், திருக்குவளை சொத்து பெரியவனுக்கும்,பொண்ணுங்களுக்கு சென்னையில் உள்ள சில பங்களாக்கள்...இப்படி எழுதிவைத்தால் அது சாதாரண குடிமகன்...




உடன் பிறப்போ, 70 வருடங்களாக அரசியலில் திளைத்தவர்...வாய்ச்சொல்லில் வீரரவர், பாளையங்கோட்டை சிறையில் பாம்புகள், பல்லிகள் நடுவில் அஞ்சாமல் இருந்த கலைஞர் என்று தவறாக எங்களுக்கு அடையாளங்காட்டப்பட்ட முதல்வர் கருணாநிதி சொத்து பிரித்த அதிசயத்தைப்பார்த்து தமிழகமே டரியலாகிக் கிடக்கிறது.

சின்னவனுக்கு தமிழ்நாடு, பெரியவனுக்கு வடநாடு, பொண்ணுக்கு டில்லி அடேயப்பா...என்னா வில்லத்தனம்.

"அப்பா அப்பா எனக்கு மத்திய மந்திரி பதவிதான் வேணும்" என்று மூத்தவன் கேட்ட போது பேராசிரியர், "தம்பி காமடி பண்ணாதீங்க நீங்க தான் அரசியல் பக்கமே வராமே ரவுடி தொழிலில் கொடிகட்டி பறக்குறீங்க பின்னஎப்படி சாத்தியம்" என்றதை தவிடு பொடியாக்கி, ஒரே தேர்தலில் மதுரையை மூத்தவனுக்கு சொந்தமாக்கி மத்தியில் போய் கிடையாக கிடந்து சாதித்து திரும்பிய தலைவரே...சான்சே இல்லே தலிவா..

ஊருக்கு வந்ததும் சின்னவன் தொல்லை, "அப்பா நேத்து வந்த அண்ணாத்தேக்கு இம்மாம் பெரிய போஸ்ட்....என் இத்தனை நாள் அரசியல் வாழ்க்கையே வேஸ்ட்... என்ற போது நடுநிலை தவறாத தலிவர் உடனே சின்னவனுக்கு எடுத்துக்க ராசா துணை முதல்வர் பதவியை என்று தமிழ் நாட்டை தாரை வார்த்து கொடுத்து குடும்பத்தில் யார் மனசும் கோணாமல் நடந்த தானைத்தலிவரே...

காலமெல்லாம் நீர் ஆட்சிக்கு வரனுமென்று கடுமையா உழச்ச இந்த தொண்டனுக்கு என்னய்ய பண்ணுனீர்....பேராசிரியர் என்ற அந்த அரசியல் அரிச்சந்திரனுக்கு எப்போதும் இரண்டாவது இடம் தானா?

அதெல்லாம் விடு தல்ல்ல்வா நாளைக்கு உனக்கு பிறந்த நாளாமே... வாழ்த்துக்கள் தலிவா....தலைவர் வாழ்க ...தங்கத்தலிவர் வாழ்க...

| 0 comments ]

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

-பாரதி